எல்லா உயிர்களுக்குமே திறமையும் பலமும் உண்டு
தன்னம்பிக்கை ஊட்டும் கதை
விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து வளர்த்து வந்தார்.
முட்செடியின் கண்ணீர்
ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்த ஒரு முட்செடி ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி அந்த முட்செடியிடம் சென்டற போது அது சொன்னது
''நான் தான் யாருக்குமே பயன்பட போவதில்லையே. எந்த திறமையும் இல்லாத என்னை ஏன் கடவுள் படைத்தார்.'' என வருத்தப்பட்டது.
''கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை.எலோருக்கும் திற்மையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தான் கண்டுபிடித்து பயன் படுத்த வேண்டும்'' என்று விவாசயி சொல்ல..
முட்செடியின் கவலை
''என்ன திறமை இருக்க போகிறது எங்கிட்ட, நானோ முட்செடி பிறரை காயபடுத்துவேனோ தவிர, வேரு யாருக்கும் உதவியாக இருக்க மாட்டேன்'' என்று தன்னை இழிவாக பேசியது.
விவசாயின் யோசனை
மறுநாள் விவசாயி தன் தோட்டைத்திலிருந்தது பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் ஒன்று சேர்த்து தோட்டைத்தை சுற்றி வேலி அமைத்தார்.
பின்பு அந்த முட்செடியிட்ம் சென்று, '' நீ முட்செடி தான் பிறறை காயப்படுத்துபவன் தான். ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும் இருக்கிறது. அதனால் தான் இன்று இந்த தோட்டைத்தையே பாதுகாக்கும் காவல்கார வேலியாக உயர்ந்துவிட்டாய்'' என்று விவசாயி சொல்ல..
கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே திறமையும் பலமும் உண்டு என்பதை உணர்ந்தது முட்செடி
Join Daily Motivation
WhatsApp - Click here
Telegram - Click here

1 Comments
download best seo optimized adsense approval templates visit and download now
ReplyDelete